குடல் நலம் பேணுதல்!
குடல் நலம் பேணுதல்!
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட
ஏசிஇ2 புரத ஏற்பிகள் இருக்க வேண்டும்,
கொழுப்பு திசுக்களில் இவை அதிகம்.
எனவே தான் கொரோனா பாதித்த 10%
பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது
என்கின்றனர் மருத்துவர்கள்.

செயற்கை
நிற உணவுகளும் துரித உணவுகளும்தான்
குடலுக்குப் பிரதான எதிரிகள்
என்கின்றனர் மருத்துவர்கள். ஆக கொஞ்ச நாளைக்கு துரித உணவுகளுக்கு குட்பை சொல்லுங்க.
அரசு என்ன செய்யப்போகிறது?
“முந்நீர் சூழ் உலகு என்பார்கள். மழைநீர்,
ஆற்றுநீர், சாக்கடை என்று இப்போது
தமிழகம் முழுதும் சூழ்ந்திருக்கும் நீர்
பெருமைக்குரியது அல்ல. கோவிட்
தொற்றுக்காலத்தில் இது பீதிக்குரியது.
உள்ளாட்சி நிர்வாகத்தின் உறக்கத்தைக்
குறிப்பது. கோடீஸ்வரப் பகுதிகளைப்
போல், குப்பத்துப் பகுதிகளும்
சுகாதாரமாக இருக்க, அரசு என்ன
செய்யப்போகிறது?” என்று மநீம தலைவர்
கமல்ஹாசன் சாடியுள்ளார்.
காலவரையற்ற வேலை நிறுத்தம்பரபரப்பு அறிவிப்பு!
டிசம்பர் 27 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக
தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன
தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
காலாண்டு வரி ரத்து, டீசல் விலை
குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால், அத்தியாய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று
கூறப்படுகிறது.
.
.