தமிழகத்தில் ஜன.,யில் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை…
தமிழகத்தில் ஜன.,யில் பள்ளிகள்
திறப்பு – பள்ளிக்கல்வித்துறை…
தமிழகத்தில் சுகாதார துறையின்
அனுமதி பெற்ற பின் ஜனவரியில்
பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அடுத்த வாரம் வெளியாகலாம்.
மேலும், மாணவர்கள் அதிகம் உள்ள
அரசு பள்ளிகளில் தேவையின்
அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க
திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக தமிழகம்
முழுவதும் உயர்நிலை, மேல்நிலை
பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை இன்று மாலை 6 மணி வரை செயல்படாது – அதிரடி
அறிவிப்பு
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
காரணமாக அவசரகால சேவைகள்,
கோவிட் சேவைகள் அல்லாத மற்ற
அனைத்து சேவைகளும் இன்று மாலை
6 மணி வரை மூடப்பட்டிருக்கும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநோயாளிகள் பிரிவுகள்
மூடப்பட்டிருக்கும். ஐசியுக்கள், சிசியுக்கள்
மற்றும் அவசர வார்டுகள் செயல்பாட்டில்
இருக்கும். ஆனால், அவசரமற்ற அறுவை
சிகிச்சைகள் நிறுத்தப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும்
பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்
இயக்கப்படுகின்றன.
இந்நிலையில்,
இந்த பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு
இன்று முதல் தொடங்கியுள்ளது.
அதன்படி, பயணிகள் www.tnstc.in,
www.redbus.in, www.paytm.com ஆகிய
இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு
செய்து கொள்ளலாம்.