கற்பூரத்திற்கு இப்படியும் பயன்!
கற்பூரத்திற்கு இப்படியும் பயன்!
பூஜைக்கு பயன்படும் கற்பூரத்தை உடலில்
ஏதேனும் நமைச்சல், எரியும் உணர்வு
இருந்தால் அந்த இடத்தில் தேய்த்தால்
ஜில்லென இருக்கும்; எரிச்சல் நீங்கும்.
ஆணி, நகசுத்தி இருந்தால் கற்பூரத்தை
பேஸ்ட் போல் தேங்காய் எண்ணெய்யில்
குழைத்து தடவினால் குணமாகும்.

ஆனால்
கற்பூரம் பலருக்கு ஏற்றுக்கொள்ளாது.
எனவே பயன்படுத்தும் முன் மணிக்கட்டு
பகுதியில் தேய்த்து சோதித்து பின்
பயன்படுத்தவும்.
இந்த தவறை மட்டும்
பண்ணிடாதீங்க… எச்சரிக்கை!
வீட்டுக்குள்ளேயே இருப்பதும் சூரிய
வெளிச்சம் படாமல் இருப்பதும் தான்
தற்காலத்தில் கிட்டப் பார்வை பிரச்சனை
(குறிப்பாக குழந்தைகள் இடையே)
அதிகரித்துள்ளதற்கு காரணம் என்கின்றனர்
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.
குழந்தைகள் ஒரு நாளைக்கு
குறைந்தது ஒரு மணி நேரமாவது
வெளிப்புற பகல் வெளிச்சத்தில் இருக்க
வேண்டும். இல்லையெனில் அது
அவர்களின் பார்வையை பாதிக்குமாம்.
வீட்டுக்குள்ளேயே குழந்தைகளை
அடைத்து வைக்கும் பெற்றோர் இதைக்
கவனிக்க வேண்டும். ஒரு மணிநேரமாவது
குழந்தைகளை வெளியில் விளையாட
விடுங்கள்.
Breaking: ரஜினி பற்றி
மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
“அர்ஜூனன் போன்று திமுக வைத்த குறி
தப்பாது, சிலரை கட்டாயப்படுத்தி கட்சி
தொடங்க வைத்து நம்மை தோற்கடிக்க
முயற்சி செய்கின்றனர். ஆனால் அது
பலிக்காது என்று” என்று திமுக தலைவர்
ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை `ரஜினி
கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு கருத்துச்
சொல்கிறேன்’ என்று சொல்லிவந்த
ஸ்டாலின், இன்றைய கட்சி ஆலோசனை
கூட்டத்தில் ரஜினியை தான் மறைமுகமாக
குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என்று
சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து?