வேள்பாரி நாவலுக்கு விருது!
வேள்பாரி நாவலுக்கு விருது!
எழுத்தாளரும், மதுரை எம்.பியுமான சு.
வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன்
வேள்பாரி நாவல் அனைத்துலக சிறந்த
படைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதை மலேசிய நிலநிதி கூட்டுறவு
சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் அறிவித்துள்ளது.
மேலும் சில செய்திகள் :
அஜித்துக்கு டிடிவி வாழ்த்து…
இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த
பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த் திரையுலகை சேர்ந்த அஜித்குமார்,
பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத்
ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு
தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில்
தமிழகம் பெருமைப்படத்தக்க மேலும்
பல சாதனைகளை அவர்கள் புரிந்திட
வேண்டுமென வாழ்த்துகிறேன் எனவும்
தெரிவித்துள்ளார்.
மேலும் சில செய்திகள்
இன்று “தேசிய சித்தா தினம்”
சித்த வைத்தியத்தின் தந்தை என
போற்றப்படும் சித்தர் அகத்தியரின்
பிறந்த நட்சத்திர நாளான இன்று
நான்காவது “தேசிய சித்தா தினம்”
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில்
கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி,
திருச்சி, கரூர், அரியலூர் மற்றும்
பெரம்பலூரில் சிறப்பு சித்த மருத்துவ
முகாம் நடைபெறுகிறது. முகாமில்
சர்க்கரை நோய், இருதயக் கோளாறுகள்,
தைராய்டு, கால் மூட்டு வலி, கருப்பை
கோளாறுகள் போன்றவற்றுக்குப்
பரிசோதனை நடத்தி மருந்துகள்
அளிக்கப்படுகிறது.