24X7 சேவை தொடங்கியது
24X7 சேவை தொடங்கியது
வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய
24 மணிநேர RTGS சேவை நேற்று முதல்
அமலுக்கு வந்துள்ளது. முன்பு வேலை
நாட்களில் மட்டும் மாலை 6 மணி வரை
மட்டுமே அளிக்கப்பட்டு வந்த இச்சேவை
தற்போது ஆண்டின் அனைத்து நாட்களும்
24 மணிநேரமும் வழங்கப்படும்.

NEFT,
IMPS முறைகளில் பணம் அனுப்பும்
சேவைகள் கடந்த ஆண்டில் 24 மணிநேர
சேவையாக மாற்றப்பட்டன.
நைட் பார்ட்டிக்கு அழைத்த
அமைச்சர்- பிரபல நடிகை
பரபரப்பு!
இரவு விருந்துக்கு விடுத்த அழைப்பை
மறுத்ததால் வனப்பகுதியில்
நடைபெறவிருந்த படப்பிடிப்புக்கு தடை
விதித்ததாக மத்தியப்பிரதேச வனத்துறை
அமைச்சர் விஜய்ஷா மீது பிரபல நடிகை
வித்யாபாலன் புகார் தெரிவித்துள்ளது
பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆனால், வித்யாபாலனின் புகாருக்கு
விஜய்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மக்களே இன்னும் 5மணிநேரத்தில் ஓடுங்க…
இன்னும் 5 மணி நேரத்தில்மக்கள் வெளியே வர வேண்டாம்.
பாம்பனுக்கு தென்கிழக்கில் 530 கிலோ
மீட்டர் தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது என்று இந்திய வானிலை
மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 5
மணி நேரத்தில் புரெவி புயல் மேலும்
வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில்
நகர்ந்து இன்று மாலை அல்லது இரவில்
திரிகோணமலை அருகே கரையை கடக்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
தென் மாவட்டங்களில் பலத்த காற்று
மற்றும் அதி கனமழை பெய்வதால் மக்கள்
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.