தண்ணீரில் மிதக்கும் சென்னை – மக்கள் கடும் பாதிப்பு
தண்ணீரில் மிதக்கும் சென்னை –
மக்கள் கடும் பாதிப்பு
சென்னையில் விடிய விடிய மழை பெய்த
நிலையில், காலையில் கனமழை பெய்ய
தொடங்கியுள்ளது. காற்றழுத்த தாழ்வு
மண்டலம் காரணமாக மீனம்பாக்கம்,
வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட
இடங்களில் பெய்து வரும் கனமழையால்
சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மழையால்
மக்கள் வீட்டை விட்டு வெளியே வர
முடியாமலும், வேலைக்கு செல்ல
முடியாமலும் தவிக்கின்றனர்.
மரணம் கண்ணீரில் மக்கள்
ஜெ., மறைந்த தினம் இன்று
தமிழக மக்களால் “அம்மா” என்று
அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள்
முதல்வர் ஜெ., மறைந்த தினம் இன்று
2016 டிச.5ம் தேதி ஜெ., மரணமடைந்து
விட்டார் என்ற செய்தியை கேட்ட
அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல்
ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில்
தத்தளித்தது.
ஒருமுறை அவர் அளித்த
பேட்டியில், 60 வயதுக்கு மேல் நான்
வாழும் ஒவ்வொரு நாளும், இறைவன்
எனக்கு அளிக்கும் கருணை என்று
குறிப்பிட்டு இருக்கிறார். 60 வயதை கடக்க
உதவிய இறைவன் 70 வயதை தொடக்கூட
கருணை காட்டவில்லை என்பது
சோகத்தின் உச்சம்.