Breaking: தமிழகத்தில் டிச.,19 முதல் ஊரடங்கில் அடுத்த தளர்வு முதல்வர் உத்தரவு
Breaking: தமிழகத்தில் டிச.,19
முதல் ஊரடங்கில் அடுத்த தளர்வு
முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் டிச.,19 முதல் திறந்த
வெளியில் விளையாட்டு, கல்வி,
கலாசாரம், பொழுதுபோக்கு, அரசியல்,
மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த
அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார்.

சமூக இடைவெளியை
பின்பற்றி 50% பங்கேற்பாளர்களுடன்
அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களை
நடத்தலாம். இதற்கு மாவட்டங்களில்
ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர
காவல் ஆணையரிடமும் அனுமதி பெற
வேண்டும் என்றார்.
மருத்துவமனையில் வைரமுத்து
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ
மருத்துவமனையில் வைரமுத்து
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய
நோய் பிரச்சனைக்காக வைரமுத்து
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இவர் உடல்நிலை
குறித்து மருத்துவமனை தெரிவிக்காத
நிலையில், உள்நோயாளியாக
அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை
கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தேர்வு!
இறுதி செமஸ்டர் தவிர, பிற செமஸ்டரில்
அரியர் வைத்திருந்து, தேர்சி என
அறிவிக்கப்பட்ட மாணவர்கள்
தங்களுக்கான மதிப்பெண்களை
உயர்த்திக்கொள்ள மீண்டும்
தேர்வு எழுதலாம் என்று சென்னை
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
டிசம்பர்
21ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம்
தேதி வரை அரியர் தேர்வு ஆன்லைனில்
நடத்தப்படும் என அறிவித்துள்ளது.