வீடுகள் எப்பொழுதும் குளுமையாக வைத்துக்கொள்ள….
வீடுகள் எப்பொழுதும் குளுமையாக வைத்துக்கொள்ள….
பெரும்பாலானவர்கள் வீடுகளில் ஒரு
அறையில் மட்டும் தான் ஏசி இருக்கும்,
ஆகையால் குடும்பத்தினர் அனைவரும்
ஒரே அறையில் தங்குவது நெருக்கடியை
ஏற்படுத்தும்.

இதை தவிர்த்து வீடு முழுதும்
குளிர்ச்சியாக வைக்க செடிகள் வளர்ப்பது,
மாடித்தோட்டம் அமைப்பது, வீட்டிற்கு
இளநிற பெயிண்ட் அடிப்பது என வீடு
மொத்தம் குளுமையாக வைக்க உதவும்.
இதன் மூலம் கரண்ட் பில்லில் இருந்தும்
தப்பிக்கலாம்.
மலச்சிக்கல் நீங்க பேரீச்சையை இப்படி சாப்பிடுங்கள்…
பேரீச்சையில் இயல்பாகவே
அதிகமிருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து,
இயற்கையான மலமிளக்கியாக
செயல்படுகிறது. இதிலுள்ள
(பீட்டா-D-க்ளூக்கன்) நார்ச்சத்து நீருடன்
எளிதாக கலந்து சக்கையை அதிகரித்து,
குடல் இயக்கத்தை எளிதாக்கி,
மலச்சிக்கலை தடுக்கிறது.
நல்ல பலன்
கொடுக்க, கொட்டை நீக்கப்பட்ட
பேரீச்சையை இரவு முழுவதும் நீரில் ஊற
வைத்து, காலையில் அந்த நீருடன் சேர்த்து
பழத்தையும் உட்கொள்ளவும்.
அவரைக்காயின் பயன்கள் தெரிந்தால் தேடிப்போய் வாங்கி சாப்பிடுவீர்கள்….
அவரைக்காயை வாரம் இருமுறை
சமைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை
குறைக்க உதவுவதால், இதனை இரத்த
அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள்
அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
மேலும், மலச்சிக்கலை போக்கும்,
வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய்
தாக்கம் குறையும். சிறுநீரை பெருக்கும்.
சளி, இருமலுக்கும் நல்லது.