tamilnadu

வங்கதேசத்தில் இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் நாளை பதவியேற்கிறார்

வங்கதேசத்தில் இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் நாளை பதவியேற்கிறார்

வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்.

அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த ஜூலை 5-ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது.

ஜூலை 16ம் தேதி போராட்டம் வெடித்தது. அதில் 105 பேர் உயிரிழந்தனர்.

அரசு வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள 93% இடங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்தான் நீக்கியது. ஆனாலும், தொடர்ந்த போராட்டம் அரசுக்கு எதிரானதாக மாறி ஒரு கட்டத்தில் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர் அமைப்பினர் முடிவுக்கு வந்தனர்.

ஏற்கனவேய நடந்த மோதலில் 300பேர் கொல்லப்பட்டனர்.ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் காவலர்கள் உட்பட 90 பேர் இறந்தனர்.

இவ்வகை இறப்பு விகிதம் இதுவரை வங்க தேசம் யாத்திக்கொண்டது இல்லை இதுவே மக்கள் மத்தியில் பெரும் அதிருப்பிதியை ஏற்படுத்தியது.

எனினும் நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தலைநகர் டாக்காவில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.

அதுவரை அரசியல் ரீதியிலான இந்த போராட்டம் மக்கள் புரட்சியாக வெடித்தது.

கடந்த காலத்தில் வங்கதேசத்தை ராணுவமே ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

அந்த எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்கியது எனவே மக்கள்

ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார்.

இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் அதிபர் முகமது ஷஹாபுதீனால் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் முகமது யூனுஸ் தலைமையில் நாளை இடைக்கால அரசு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago