Uncategorized

மூடநம்பிக்கைகளுக்கு முற்று புள்ளி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ்!

மூடநம்பிக்கைகளுக்கு முற்று புள்ளி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ்!

ஆன்மீக சொற்பொழிவின்போது பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களை கண்டித்து கேள்வி எழுப்பிய பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர்களுக்கு மாணவிகள் பாதபூஜை செய்வது போன்ற காணொளிக்கு ” தான் ஆசிரியர்களை பெரிதும் மதிப்பதாகவும், பள்ளிகளுக்கு பார்வையிட சென்றால் தலைமையாசிரியர் இருக்கையில் இதுவரை அமர்த்திந்ததில்லை எனவும், பாதபூஜை போன்ற செயல்கள் இனி நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கல்விக்கு சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ. மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.

மகாவிஷ்ணு என்பவர் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில் முழுமையாக ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார்.

பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சிகளைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று காலை அந்த பள்ளியின் முன் கூடினர்.

மூடநம்பிக்கையை வளர்க்கும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தது யார் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சோ.மதுமதி தெரிவித்துள்ளார். கல்விக்கு சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

1 month ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

1 month ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

5 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

5 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

5 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

5 months ago