Connect with us

cinema

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

Published

on

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவ.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வசூல் சாதனை செய்யும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், நெகட்டிவ் விமர்சனங்களால் படம் வசூலில் அடி வாங்கியது.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது.

படம் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

cinema

இயக்குநராக அறிமுகமாகிறார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்

Published

on

இயக்குநராக அறிமுகமாகிறார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்

இயக்குநராக அறிமுகமாகிறார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்

 

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் கிளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜேசன் சஞ்சய்.

தற்போது ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். அவரின் 38வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு கிளிம்ஸ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. தற்போது சந்தீப் கிஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் இந்த கூட்டணி எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Continue Reading

cinema

கூலி பட வீடியோவை வெளியிட்டது படக்குழு

Published

on

கூலி பட வீடியோவை வெளியிட்டது படக்குழு

கூலி பட வீடியோவை வெளியிட்டது படக்குழு

 

‘கூலி’ திரைப்பட படக்குழு “அரங்கம் அதிரட்டுமே, விசிலு பறக்கட்டுமே..” என்ற பின்னணி பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி முதன்முறையாக இணைவதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இவரது இசை ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிப்பு வெளியானது.

தற்போது, திரைப்படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், படக்குழு ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் “அரங்கம் அதிரட்டுமே, விசிலு பறக்கட்டுமே..” என்ற பின்னணி பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் மற்றும் காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

Continue Reading

cinema

காப்புரிமை விவகாரத்தில் A.R.ரஹ்மானுக்கு இடைக்கால தடை

Published

on

காப்புரிமை விவகாரத்தில் A.R.ரஹ்மானுக்கு இடைக்கால தடை

காப்புரிமை விவகாரத்தில் A.R.ரஹ்மானுக்கு இடைக்கால தடை

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் “வீர ராஜ வீர” பாடலுக்காக இரண்டு கோடி ரூபாய் அபராதம் செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்-2” திரைப்படத்தில் இடம்பெற்ற “வீர ராஜ வீர” பாடல், ஃபயாஸ் வசிஃபுதின் டாகர் என்பவரின் தந்தை மற்றும் உறவினர் இசையமைத்த “சிவா ஸ்துதி” பாடலின் நகல் என்று கூறி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி “வீர ராஜ வீர” பாடல் சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டது என கூறி, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இரண்டு கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு மே 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தற்போது இரண்டு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதில்லை.

Continue Reading

Trending