Connect with us

cinema

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published

on

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் - தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு!

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு!

புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது.

நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா திரையரங்கிற்கு சென்றார்.

கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் பிரீமியர் காட்சி பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) நிலை தடுமாறி கீழே விழுந்து இருவர் மீதும் ஏறி மிதித்தனர்.

சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருததுவர்கள் தெரிவித்தனர்.

ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார்.

அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனா அளித்த மனு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை கூறுகிறேன். நான் நலமாக இருக்கிறேன், அதனால் எனது ரசிகர்களும், ஆதரவாளரகளும் கவலைப்பட தேவையில்லை. நான் சட்டத்தை மதிக்கிறேன், எனவே சட்ட நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்”

cinema

தளபதி விஜயின் ஜனநாயகன்

Published

on

By

தளபதி விஜயின் ஜனநாயகன்.

தளபதி விஜயின் ஜனநாயகன்

விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்போடு “ஜனநாயகன்”.

தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஜனநாயகன்”.

இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.இப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார்

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது

இந்த படத்தின் ப்ரோமோ டீசர் அல்லது மோஷன் போஸ்டர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் இந்த அப்டேட்க்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Continue Reading

cinema

அஜித்துக்கு கிடைத்த பத்ம பூஷன் விருது உற்சாகத்தில் ரசிகர்கள்

Published

on

அஜித்துக்கு கிடைத்த பத்ம பூஷன் விருது உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித்துக்கு கிடைத்த பத்ம பூஷன் விருது உற்சாகத்தில் ரசிகர்கள்

பத்ம பூஷன் விருதுகள் வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.இந்த விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்
பத்ம பூஷன் விருதை திரௌபதி முர்மு அவர்கள் நடிகர் அஜித்குமாருக்கு வழங்கினார்
இந்த ஆண்டு மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் 13 பேர், அவர்களில் அஜித்குமாரும் ஒருவர்.

இந்த நிகழ்வு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்துக்கு கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரம்
அமராவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்குமார்.

அவர் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
அதிக தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும், ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு அவரை ‘அல்டிமேட் ஸ்டார்’ ஆக உயர்த்தியுள்ளது

கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்குப் பிறகு பத்ம பூஷன் விருதை வெல்லும் ஐந்தாவது தமிழ் நடிகர் என்ற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.

இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோர்ட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலாக வந்திருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
அஜித்துடன் அவரது குடும்பத்தினரும் இந்த பெருமைமிகு தருணத்தில் உடனிருந்தனர்.

அவர் குடியரசுத் தலைவர் கையால் விருதை வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Continue Reading

cinema

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!

Published

on

By

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!

தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் பாரதிராஜா தனது மகன் மனோஜ் சமுத்திரம், கடல் பூங்கா அல்லு அர்ஜூனா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

2023ஆண்டு தனது தந்தையை வைத்து ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கினார்.

மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

மனோஜ் பாரதிராஜா (48) மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

மனோஜ் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading

Trending