Connect with us

cinema

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published

on

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் - தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு!

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு!

புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது.

நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா திரையரங்கிற்கு சென்றார்.

கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் பிரீமியர் காட்சி பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) நிலை தடுமாறி கீழே விழுந்து இருவர் மீதும் ஏறி மிதித்தனர்.

சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருததுவர்கள் தெரிவித்தனர்.

ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார்.

அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனா அளித்த மனு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை கூறுகிறேன். நான் நலமாக இருக்கிறேன், அதனால் எனது ரசிகர்களும், ஆதரவாளரகளும் கவலைப்பட தேவையில்லை. நான் சட்டத்தை மதிக்கிறேன், எனவே சட்ட நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்”

cinema

மதுரையில் ஆகஸ்ட் 25ல் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு!

Published

on

By

மதுரையில் ஆகஸ்ட் 25ல் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இது கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளைக் காட்டுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது எக்ஸ் (X – முன்னர் ட்விட்டர்) தளத்தில் இந்த மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வெற்றி குறித்த விஜய்யின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

மாநாட்டை முன்னிட்டு, இன்று (ஜூலை 16, 2025) காலை 5 மணிக்கு மதுரையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். இது மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது.

Continue Reading

cinema

ஜூலை 25-ல் கமல்ஹாசன் எம்.பியாகிறார் – மக்கள் நீதி மய்யம்!

Published

on

By

ஜூலை 25- ல் கமல்ஹாசன் எம்.பியாகிறார் - மக்கள் நீதி மய்யம்!

ஜூலை 25- ல் கமல்ஹாசன் எம்.பியாகிறார் – மக்கள் நீதி மய்யம்!

தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன், வரும் ஜூலை 25 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக (MP) பதவியேற்க உள்ளதாக அவரது கட்சியான மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், கமல்ஹாசனின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது கட்சிக்கும், அதன் தலைவர் கமல்ஹாசனுக்கும் ஒரு முக்கிய அரசியல் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் கமல்ஹாசனின் இருப்பு, மக்கள் நீதி மய்யத்தின் குரலை தேசிய அளவில் ஒலிக்கும் வாய்ப்பை வழங்கும்.

2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி, தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார். அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதன் மூலம், தேசிய அளவில் தனது அரசியல் ஆளுமையையும், கட்சியின் கொள்கைகளையும் எடுத்துரைக்க அவருக்கு ஒரு பெரிய மேடை கிடைக்கும்.

தலைவர் கமல் ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

cinema

எளிதில் ஈடுசெய்ய முடியாதது சரோஜாதேவியின் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published

on

By

எளிதில் ஈடுசெய்ய முடியாதது சரோஜாதேவியின் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

எளிதில் ஈடுசெய்ய முடியாதது சரோஜாதேவியின் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நடிகை பி.சரோஜா தேவி (87) உடல் நலக்குறைவால் பெங்களுருவில் காலமானார்.  சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அழகிய முகபாவங்கள், நளினமான நடிப்பு, மற்றும் துடிப்பான உடல்மொழி ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்தன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் போன்ற அன்றைய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அவர் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டது போல, “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”, “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா”, “உன்னை ஒன்று கேட்பேன்”, “லவ் பேர்ட்ஸ்”, “தொட்டால் பூ மலரும்”, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” போன்ற பல இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி, தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார். அவரது பங்களிப்புகள் இந்தியத் திரையுலகிற்கு அளப்பரியவை.

இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டார். மேலும், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவை அவரது கலைப் பயணத்திற்கும், இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரங்களாகும்.

முதலமைச்சர் மேலும் தனது இரங்கல் செய்தியில், சரோஜாதேவி அவர்களின் வசீகரமான நடிப்புத் திறமையையும், தமிழ் திரையுலகிற்கு அவர் அளித்த பெரும் பங்களிப்பையும் விரிவாகப் பாராட்டியுள்ளார். “எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது” என்று குறிப்பிட்டு, அவரது இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், மற்றும் அவரது ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.

 

Continue Reading

Trending