Employment
இந்திய இரயில்வேயில் 32000 பணியிடங்கள்

இந்திய இரயில்வேயில் 32000 பணியிடங்கள்
பதவி
1. நிலை 1 (குழு D) – 32000 (தோராயமாக)
கல்வித் தகுதி
மெட்ரிகுலேஷன்/SSLC/10வது தேர்ச்சி (OR) ITI (NCVT) //தொழில் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (SCVT)) (அல்லது) NCVT வழங்கிய தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC)
வயது வரம்பு: Gen/ UR Applicants – 18 to 36 Years
வயது வரம்பு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
சம்பளம் : 1. நிலை 1 (குரூப் D) – நிலை 1 ரூ.18000/-
தேர்வு செயல்முறை:
- கணினி அடிப்படையிலான சோதனை
- உடல் திறன் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு (DV) மற்றும் மருத்துவ பரிசோதனை
விண்ணப்பக் கட்டணம்:
- For all applicants (with the exception of those listed below at SI No. 2). When you appear in CBT, you will receive a refund of Rs. 400 (four hundred) out of the Rs. 500 (five hundred) fee, after deducting bank fees – Rs.500/-
- For applicants who are women, PwBD, transgender, or Ex-Servicemen and applicants from Economically Backward Class, ST/SC, and minority communities. (Caution to Candidates: EBC should not be confused with Other Backward Class OR Economically Weaker Section) The amount of Rs 250 (two hundred fifty) will be fully refunded, with any applicable bank fees subtracted on appearing in CBT – Rs.250/-
கட்டண முறை: ஆன்லைன்
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 23.01.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2025 @ 11.59 PM
Employment
டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார்.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நெல்லைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.3,800 கோடி முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் “வாழ்த்துகள்” என்று எழுதி கையொப்பமிட்டார்.
சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாபு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Employment
திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.
பக்தர்கள் பள்ளத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.
Employment
பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு போலிசார் அனுமதி அளித்துள்ளனர்.
13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாளை மறுநாள் பரந்தூர் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது.
தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.
நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Employment7 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized8 months ago
Hello world!
-
cinema7 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu7 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema7 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india3 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india7 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india7 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்