Connect with us

Employment

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

Published

on

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு போலிசார் அனுமதி அளித்துள்ளனர்.

13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை மறுநாள் பரந்தூர் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது.

தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.

நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Employment

குரூப் 4 வேலைவாய்ப்பு அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Published

on

By

குரூப் 4 வேலைவாய்ப்பு அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குரூப் 4 வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் அடிப்படை பதவிகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

2025ம் ஆண்டு குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 24 ஆம் தேதி வரை இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு மூலம் 3 ஆயிரத்து 935 பணியிடங்கள் நிரப்பபடும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Continue Reading

Employment

அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 காலிப்பணியிடங்கள் – மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம்!

Published

on

By

3,274 vacancies in State Transport Corporations - Applications can be made from March 21!

அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 காலிப்பணியிடங்கள்

– மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

8 மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் 756 இடங்களும்,
சேலத்தில் 486 இடங்களும்,
சென்னையில் 364 இடங்களும்
திருநெல்வேலியில் 362 இடங்களும்
கோவையில் 344 இடங்களும்,
மதுரையில் 322 இடங்களும்,
விழுப்புரத்தில் 322 இடங்களும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 இடங்கள் நிரப்பப் பட உள்ளன.

ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு நாளை பிற்பகல் 1 மணி முதல் முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை http://www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Employment

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published

on

By

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நெல்லைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.3,800 கோடி முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் “வாழ்த்துகள்” என்று எழுதி கையொப்பமிட்டார்.

சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாபு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Continue Reading

Trending