india

அர்ச்சகர் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு

அர்ச்சகர் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு

 

அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற அரசாணையை பிறப்பித்தது.

இந்த அரசாணையின்படி அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி மூலம் பலர் தேர்ச்சி பெற்றனர்.

பயிற்சி முடித்திருந்தும் மாணவர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை.

ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கோயில்களுக்கு ஆகம விதிப்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

உச்ச நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்று இடைக்கால தடை விதித்தது.

இந்த இடைக்கால தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் தாக்கல் செய்துள்ளார்.

முறையாக பயிற்சி பெற்றும், அர்ச்சகர்களாக நியமிக்கப்படவில்லை.
தகுதியின் அடிப்படையிலும், இந்து அறநிலையத் துறை நடத்திய தேர்வுகள் மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையிலும் தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

எனவே, இந்த இடையீட்டு மனுவை ஏற்று, பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமனம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago