ஏர் இந்தியா விமான விபத்து - 110 பேர் உடல்கள் மீட்பு!
கமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.
போயிங் 787 ரக ஏர் இந்தியா விமானம் 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் விழுந்து நொறுங்கியது.
சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன
169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ், ஒருவர் கனடா,7 பேர் போர்ச்சுக்கலை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 பேர் குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது
குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதியதில், கட்டடத்தில் இருந்த மாணவர்களும், மருத்துவர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.
பலபேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…