இந்திய ரயில்வே துறை அமைச்சருடன் ஆளுநர் ரவி சந்திப்பு!
தமிழ்நாடு மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருவது மிகுந்த திருப்தி அளிக்கிறது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
ராஜ்பவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“இந்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
அவரது தலைமையில் ரயில்வே துறை நமது மாநிலம் மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருவது மிகுந்த திருப்தி அளிக்கிறது.
பயணிகளுக்கென அதிநவீன வசதிகளுடன் கூடிய 8 வந்தே பாரத் நவீன ரயில்கள் இப்போது தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இயக்கப்படுகின்றன.
ரூ.33,467 கோடி செலவில் புதிய தண்டவாளங்கள் ரூ.2,948 கோடி செலவில் 77 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கப்பட்ட அம்ரித் பாரத் நிலையங்களாக மாற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டை ரயில்வே சேவைகளின் மிகப்பெரிய பயனாளியாக ஆக்குகின்றன.
தமிழ்நாடு மக்கள் மீது கொண்ட அளவற்ற அன்பு செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…