இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு மக்கள் பேரணி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக பேரணி ஒன்று நடைபெற உள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக இந்திய ராணுவம் செயல்பட்டு வரும் வீரமிகு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்தப்படுகிறது.
இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இந்த பேரணி நடத்தப்படுகிறது.
சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நாளை மாலை 5 மணிக்கு பேரணி ஆரம்பிக்கிறது.
தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெறுகிறது.
முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்த பேரணியில் பங்கேற்க முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…