விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு -முகமது கைஃபின் கருத்து
கோலி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்பியதாகவும், ஆனால் அவருக்கு பிசிசிஐ போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் முன்னாள் இந்திய வீரர் கைஃப் கூறியுள்ளார்.
அவர் ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என்று கூறியபோது விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் வர வேண்டும் என்று அவர்நினைத்திருந்தார் எனவும் ஆனால், அவருக்கு தேவையான ஆதரவை பிசிசிஐவழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் அவசரத்தில் விக்கெட்டை இழந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் ஃபார்மில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், 36 வயதிலும் நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் கோலி முன்பு போல மீண்டும் வந்திருக்கலாம். இளம் வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்தார்.
விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் தனது வீடியோக்களில் டெஸ்ட் கிரிக்கெட்டைத்தான் தனக்குப் பிடித்தமான ஃபார்மேட் என்று குறிப்பிடுவார். ஆனால், தற்போது அவர் எடுத்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவு.
சமீபத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய அணியில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவரது ஓய்வு அறிவிப்பு வந்தது.
முகமது கைஃபின் இந்த கருத்துக்கள், விராட் கோலியின் ஓய்வு குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. .
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…