தொடர்ந்து உயரும் தங்கம் விலை!
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 640-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரங்கள் நாளுக்கு நாள் மாறிவரும் சூழலில், உலகச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையும் தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிர்ணயம் உலகளாவிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், அதன் போக்கில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் நிகழ்வது இயல்பு.
நடப்பு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தாலும், பெரும்பாலான நாட்களில் அதன் போக்கு உயர்வுடனேயே இருந்து வருகிறது. மஞ்சள் உலோகத்தின் மதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதையே இது காட்டுகிறது.
இந்த விலை உயர்வின் உச்சகட்டமாக, கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹74,320 என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இந்த விலை உயர்வு முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
வரலாற்று உச்சத்தைத் தொட்ட பிறகு, தங்கத்தின் விலையில் சற்று சரிவு காணப்பட்டாலும், அது நீடிக்கவில்லை. மீண்டும் தங்கம் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 80-க்கு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 640-க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…