ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்
ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை, ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கிகள் அல்லது வங்கியில்லா நிதி நிறுவனங்கள் தங்கத்தின் தூய்மை குறித்து சான்றிதழை வழங்க வேண்டும். இந்த சான்றிதழில் கடன் வழங்குபவர் மற்றும் கடன் பெறுபவர் இருவரும் கையொப்பமிட வேண்டும்.
தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். அடமானம் வைக்கப்படும் தங்க நாணயங்களின் மொத்த எடை 50 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
தனிநபர்கள் ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் பெற முடியும். ஒரு கிலோவுக்கு மேல் உள்ள நகைகளுக்கு கடன் வழங்கப்பட மாட்டாது.
அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் ஆக இருக்க வேண்டும்.
கடன் வாங்குபவருக்கு வழங்கப்படும் அறிவிப்பு காலம், கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு போன்ற அனைத்து தகவல்களும் முழுமையாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 வேலை நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.
இந்த விதிமுறைகள், வங்கிகளின் செயல்பாடுகளை ஓருமைப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான சேவை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி எடுத்த முக்கியமான கட்டுப்பாடுகள் ஆகும். மேலும், தங்க அடகுக் கடன்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சியாகவும் இருக்கிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…