ஜி7 உச்சி மாநாடு பங்கேற்க கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி!
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்பே ஜி7 (குரூப் ஆஃப் செவன்) ஆகும். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஆண்டுதோறும் ஜி7 உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் ஒன்றில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாடு இன்று (ஜூன் 18, 2025) நிறைவடைகிறது.
ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றுள்ளார்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், கால்கரி நகருக்கு விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் கனடா அதிகாரிகள் வரவேற்றனர். இந்த மாநாட்டில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…