சென்னை மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுக்கிடையே போர் நிலவியது.
‘ஆபரேஷன் சிந்தூர் ‘என்ற பெயரில் இந்திய ராணுவம் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டல் ஒரு குறுஞ்செய்தி மூலம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மிரட்டல் செய்தியில், “ஆபரேஷன் சிந்தூருக்காக நாங்கள் ஸ்டேடியத்தில் வெடிகுண்டு வெடிப்போம்… இரத்தக் களரி ஏற்படும்” குறிப்பிடப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்தவுடன், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சேப்பாக்கம் மைதானத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதட்டமான சூழ்நிலை காரணமாக, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…