india
‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!
‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!
ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் எம்.எஸ்.தோனி இடம்பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவோரை மதிப்புமிக்க ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் கௌரவிக்கப்படும்.
புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், சவுத் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோரும் சேர்கப்பட்டுள்ளனர். அதனுடன், பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் மற்றும் இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
பாகிஸ்தான் வீரர் சனா மிர் பெற்றுள்ளார். பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்திய வீரர்களாக இந்த கெளரவத்தை பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“தோனி 2007 ஐசிசி உலக டி20 வென்ற கேப்டன், 2011இல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டன், 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன் ஆவார்.
2009ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முதல் இடத்திற்கு அழைத்துச் சென்றவர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வாழ்த்துக்கள். புகழ்பெற்றவர்களின் பட்டியலில் இணையும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஆவார்”
india
தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம், புகார்களைக் கையாள்வதில் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் உண்மையான கடமை என்ன என்பதைப் ப. சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்கினார். தேர்தல் ஆணையம் என்பது, நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும், நீதிமன்றம் போல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிர்வாக அமைப்பாக, தேர்தல் ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அதன் பொறுப்பு.
தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, மக்களிடையே அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் என்றும் ப. சிதம்பரம் அவர்கள் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் முக்கியப் பணி. எனவே, மக்கள் அளிக்கும் புகார்களை நிராகரிப்பது அதன் கடமைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
india
“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!
“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!
திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.
தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.
நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.
பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.
தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.
காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
india
TNPSC 2 & 2A போட்டித்தேர்வு – 645 காலி பணியிடங்கள்!
TNPSC 2 & 2A போட்டித்தேர்வு – 645 காலி பணியிடங்கள்!
குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகளுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II (Combined Civil Services Examination-II) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பேரூராட்சி உதவி ஆணையர், சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், உள்ளிட்ட குரூப் 2 (நேர்காணல் உள்ள பதவிகள்) மற்றும் குரூப் 2A (நேர்காணல் இல்லாத பதவிகள்) சேவைகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்
645 (குரூப் 2-க்கு 50 பணியிடங்கள், குரூப் 2A-க்கு 595 பணியிடங்கள்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 13, 2025
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் இருக்க வேண்டும்.
TNPSC 2 & 2A தேர்வு கட்டணம்: ₹100
சில பிரிவினருக்கு (SC/ST, மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள்) கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
-
india1 year agoராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி
-
Employment1 year agoதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema1 year ago“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
Uncategorized1 year ago
Hello world!
-
tamilnadu1 year agoStaff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema1 year agoஇந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india12 months agoமெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india1 year agoஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
