sports
பாரிஸ் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்

பாரிஸ் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்
- 2024ம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 26 ஜூலை 2024 இன்று இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.
- இது பாரிஸில் இரண்டாவது முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் முதல் முறையாக 1900-ம் ஆண்டு பாரிஸில் ஒலிம்பிக் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- சீன் நதியில் நடத்தப்பட்ட தொடக்க விழா நடைபெற உள்ளது.பல்வேறு நாடுகளின் வீரர்கள் படகுகளில் அணிவகுத்து வந்தது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
- இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் 117 வீரர்களுடன் களமிறங்கியது.
- இன்று ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.
sports
சென்னை மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுக்கிடையே போர் நிலவியது.
‘ஆபரேஷன் சிந்தூர் ‘என்ற பெயரில் இந்திய ராணுவம் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டல் ஒரு குறுஞ்செய்தி மூலம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மிரட்டல் செய்தியில், “ஆபரேஷன் சிந்தூருக்காக நாங்கள் ஸ்டேடியத்தில் வெடிகுண்டு வெடிப்போம்… இரத்தக் களரி ஏற்படும்” குறிப்பிடப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்தவுடன், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சேப்பாக்கம் மைதானத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதட்டமான சூழ்நிலை காரணமாக, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
india
சென்னை அணியை பஞ்சாப் அணி வென்றது

சென்னை அணியை பஞ்சாப் அணி வென்றது
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை சேப்பாகத்தில் நடைபெற்ற 49வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி டெத் ஓவர்களில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்களின் முடிவில் ஆல் அவுட் ஆனது.
பஞ்சாப் அணிக்கு 191 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
சென்னை அணி அதிகபட்சமாக 82 ரன்களும், டெவால்டு பிரெவிஸ் 32 ரன்களும் அடித்தனர்.
பஞ்சாப் 19.4 ஓவர்களிலேயே 194 ரன்கள் குவித்தது வெற்றிப் பெற்றது.
பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் அதிகபட்சமாக 72 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 54 ரன்களும் அடித்தனர்.
அதே வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டி விறுவிறுப்பாகவும், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும் அமைந்தது.
india
14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.இந்த போட்டியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், ராகுல் தெவாத்தியா 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 209 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் 50 ரன்களுடனும், ஷாருக் கான் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் புகுந்தனர்.குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் 35 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 4 ரன்களில் வெளியேறினார். இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முக்கிய நாயகனாக பார்க்கப்படுபவர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தான். அவர் தனது அதிரடியான சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது. தற்போது வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.சிறு வயதிலேயே இத்தகைய பெரிய சாதனையை நிகழ்த்திய வைபவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
Employment10 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema10 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
Uncategorized11 months ago
Hello world!
-
cinema10 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
tamilnadu10 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
india6 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india10 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
india10 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்