Connect with us

tamilnadu

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

Published

on

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

குரங்கம்மை பாதிப்பு இதுவரைக்கும் இத்தியாவில் எங்கும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை நோய்காக சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள 10 படுக்கைகள் கொண்ட தனி சிறப்பு வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

தமிழக முக்கிய விமான நிலையங்களில் குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் இதுவரை குரங்கம்மையினால் 223 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் குரங்கம்மை நோய்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட குரங்கம்மை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்த 200 பேர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் தொடங்கப்பட உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

tamilnadu

ரூ.100 கோடி நிதியில் மகப்பேறு மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published

on

ரூ.100 கோடி நிதியில் மகப்பேறு மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ரூ.100 கோடி நிதியில் மகப்பேறு மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனை 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மருத்துவ கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 5 கோடி ரூபாய் செலவில் முழு உடல் பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் துல்லியமாக கண்டறிய முடியும்.

மூன்றாம் பாலினத்தவருக்காக தனி பிரத்யேக வார்டு திறக்கப்பட்டிருக்கிறது.

நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் கட்டணத்தில் ஏசி வசதியுடன் கூடிய 27 அறைகள் கொண்ட வார்டும் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

மக்களைத் தேடி மருத்துவத்தில் இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் கண்டறியும் திட்டத்திற்கு ஐநா சபை விருது கிடைத்துள்ளது.

கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன

இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

tamilnadu

அரசியல் தலைவர்களின் அன்னையர் தின வாழ்த்து

Published

on

அரசியல் தலைவர்களின் அன்னையர் தின வாழ்த்து

அரசியல் தலைவர்களின் அன்னையர் தின வாழ்த்து

 

அன்னையர் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைத்து அன்னையருக்கும் தனது வாழ்த்தை தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டில் மே 11-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பொதுமக்களும் தங்கள் தாயரிடம் ஆசிர்வாதம் பெறுவது வழக்கம்.

அன்னையர் தினம் தாய்மார்களின் தியாகத்தையும் அன்பையும் போற்றும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் தங்கள் தாயை மகிழ்விக்க பரிசு அளிப்பது, வெளியே சுற்றுச் செல்ல அழைப்பது என தனது அன்பை வெளிப்படுத்துவார்கள்.

அன்னையர் தினத்தையொட்டி, மு.க. ஸ்டாலின் தமது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து,
அன்பினால் அரவணைத்து,
தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி,
அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும்
அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்!”என அதில் பதிவிட்டிருந்தார்.

‘ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்’ – என தனது அன்னையர் தினத்தையொட்டி சீமான் வாழ்த்து தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் அவர்கள்
‘அன்பின் மொழியை அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்’ என அனைத்து அன்னையருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் பலரும் தாய்மார்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

india

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது எப்படி?

Published

on

How did the India-Pakistan war end

பாகிஸ்தான் மற்றும் இந்தியா தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலளிக்க கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மே 8 மற்றும் 9ம் தேதிக்கிடையிலான இரவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா S-400 மற்றும் ஆகாஷ் போன்ற பாதுகாப்பு முறைமைகளால் தடுப்பதில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பாகிஸ்தான் முதல்முறையாக இந்தியாவுடன் நேரடியாக பேசியது. தாக்குதல் மேலும் தீவிரமாவதற்குள், பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், உடனடி சமாதானம் ஏற்படுவதை வரவேற்பதாகவும் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார்.

பின்னர், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: “பாகிஸ்தான் இராணுவத் தலைவர், இந்தியா இராணுவத் தலைவரை இன்று மாலை 3:35 மணிக்கு அழைத்தார். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குப் பிறகு, நிலம், வானம் மற்றும் கடல் வழித் தாக்குதல்களை இருதரப்பும் நிறுத்த ஒப்புக் கொண்டன. மே 12-ம் தேதி இரு நாடுகளின் ராணுவத் தலைவர்கள் மேலும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்றார்.

Continue Reading

Trending