india
வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி!

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி!
காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு நாட்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நாளை ( அக்.16ம் தேதி) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது :
“தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்து அக்.16, 17 ஆகிய தேதிகளில் வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். அதேபோல் அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஓமன் கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்திய பகுதிகளிலிருந்து தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலக உள்ளது.
india
மும்பையில் பட்டாசு வெடிக்க தடை

மும்பையில் பட்டாசு வெடிக்க தடை
மும்பை மாநகர காவல் துறை மே 11 முதல் ஜூன் 9, 2025 வரை எல்லைக்குள் பட்டாசுகள் மற்றும் ராக்கெட்டுகளை வெடிக்க தடை விதித்துள்ளது .
ஜம்மு காஷ்மீரின் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுப்பதுடன், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மும்பை காவல்துறை மே 11 முதல் ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது.இது பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பட்டாசுகள் போன்ற வெடிபொருட்கள் பயங்கரவாத சூழலில் பீதி அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்பதால், இது பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
india
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது எப்படி?

பாகிஸ்தான் மற்றும் இந்தியா தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலளிக்க கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மே 8 மற்றும் 9ம் தேதிக்கிடையிலான இரவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா S-400 மற்றும் ஆகாஷ் போன்ற பாதுகாப்பு முறைமைகளால் தடுப்பதில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பாகிஸ்தான் முதல்முறையாக இந்தியாவுடன் நேரடியாக பேசியது. தாக்குதல் மேலும் தீவிரமாவதற்குள், பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், உடனடி சமாதானம் ஏற்படுவதை வரவேற்பதாகவும் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார்.
பின்னர், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: “பாகிஸ்தான் இராணுவத் தலைவர், இந்தியா இராணுவத் தலைவரை இன்று மாலை 3:35 மணிக்கு அழைத்தார். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குப் பிறகு, நிலம், வானம் மற்றும் கடல் வழித் தாக்குதல்களை இருதரப்பும் நிறுத்த ஒப்புக் கொண்டன. மே 12-ம் தேதி இரு நாடுகளின் ராணுவத் தலைவர்கள் மேலும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்றார்.
india
சண்டை முடிந்தாலும், சிந்து நீர் இல்லை – இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் சமீபத்தில் முடிவடைந்தது. பாகிஸ்தான், இந்தியாவின் தாக்குதலால் பின்னடைவுக்கு போய், போர் நிறுத்த கோரியது, அதை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய தீர்மானத்தில் இந்தியா எந்த மாற்றமும் செய்யவில்லை; அந்த நடவடிக்கை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் இந்தியாவின் பைசரன் பள்ளத்தாக்கில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாக கூறப்பட்டது. இதற்குப் பதிலளிக்க இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தது. 1960ல் உலக வங்கி முன்னிலையில் கையெழுத்தான சிந்து நதி ஒப்பந்தம், பாகிஸ்தானுக்குக் குடிநீர் ஆதாரமாக இருந்தது.
இதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது. இது 65 ஆண்டுகளில் முதன்முறையாக நடந்துள்ளது. இனி இந்தியா, நீர்வழிப் திட்டங்களை தானாகவே மேற்கொள்ள முடியும் எனும் நன்மை உள்ளது. இந்தியா சண்டையை மட்டும் நிறுத்த ஒப்புக் கொண்டாலும், பேச்சுவார்த்தைக்கோ பிற விசயங்களுக்கோ இன்னும் தயாராக இல்லை.
-
Employment10 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema10 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
Uncategorized11 months ago
Hello world!
-
cinema10 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
tamilnadu10 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
india6 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india10 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
india10 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்