Connect with us

india

தேவருக்கு புகழ் சேர்க்ககூடிய பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published

on

தேவருக்கு புகழ் சேர்க்ககூடிய பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை மாநகரில் மாபெரும் வெண்சிலை. பசும்பொன் மண்ணில் நினைவில்லம். மேலநீலிதநல்லூர், கமுதி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 3 அரசு கலை, கல்லூரிகள். மதுரை ஆண்டாள்புரத்தில் முத்துராமலிங்கனார் பாலம்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20% ஒதுக்கீடு. கடந்த 2007-ல் நூற்றாண்டு விழாவை மிக எழுச்சியாக கொண்டாடினோம்.

அப்போது அவர் வாழ்ந்த இல்லம்  புதுப்பிக்கப்பட்டது. விழாவை அடையாளம் காட்டும் வகையில் வளைவு அமைக்கப்பட்டது.

நூலக கட்டடம், பால் குடங்கள் வைப்பதற்கு மண்டபம், முளைப்பாரி மண்டபம் என தேவருக்கு புகழ் சேர்க்கக்கூடிய பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.

தற்போது முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, குருபூஜை நடத்தி இருக்கிறோம்.

பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளது.

நேற்று முன்தினம் முத்துராமலிங்க தேவர் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

இதுபோல அவரைப் போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து  செய்வோம்.

மீனவர் பிரச்னைகள் சம்பந்தமாக தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறோம். டெல்லி  செல்லும்போதெல்லாம் பிரதமரிடம் பேசி வருகிறேன். 

வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் குறிப்பிட்டு காட்டியுள்ளேன். 

அவர்களும் எங்கள் கடிதத்திற்கு மதிப்பளித்து, தொடர்ந்து விடுதலை செய்து வருகின்றனர். 

இருப்பினும் இந்த பிரச்னை தொடர்கிறது. இருப்பினும் இதற்கு முடிவு காணப்பட வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறோம்.

2008 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டப் பணி துவங்கப்பட்டது. 

அதற்குபின் வந்த அதிமுக அதனை கிடப்பில் போட்டது. 

தொடர்ந்து நாம் ஆட்சிக்கு வந்தப்பிறகு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 40% பணிகள்  முடிக்கப்பட்டுள்ளன” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

Published

on

By

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது - சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு மொழிக் கொள்கையை மீறுகிறதா? என மிழ்நாட்டிற்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,154 கோடி என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்புகளில் தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் பிராந்திய மொழி என்பதன் கீழ் செயல்படுத்தி வருவதாகவும்,

தமிழக பள்ளிகளில் தமிழ் ஒரு மொழி பாடமாக இருப்பதை மத்திய அரசு ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2024-2025 நிதியாண்டுக்கான 4305.66 கோடி ரூபாய் வழங்க திட்ட ஒப்புதல் வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்பதையும் மத்திய கல்வி இணை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்

 

Continue Reading

india

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

Published

on

By

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் - நாசா அறிவிப்பு!

மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாளை மார்ச் 18 பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Continue Reading

india

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

Published

on

By

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம்!

சுமார் 3 ஆண்டாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார்.

சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.

Continue Reading

Trending