Connect with us

india

குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்த போக்குவரத்துக் கழகம்!

Published

on

குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்த போக்குவரத்துக் கழகம்!

அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதாந்திர குலுக்கல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டும் மற்றும் ஒரு சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட ஏழு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் பயணம் செய்து பயன் பெறுகின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் TNSTC Mobile App மூலம் கிடைக்கிறது.

சுமார் 20,000 பயணச்சீட்டுகள் பயணிகளால் முன்பதிவு செய்யப்படுகின்றன.

முன்பதிவை ஊக்குவிப்பதற்காக ஊக்கத் தொகைத் திட்டம் 2024 ஜனவரி முதல், வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர “குலுக்கல் முறை” மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2024 முதல் மே 2024 வரை, ஒவ்வொரு மாதமும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 வழங்கப்பட்டது.

ஜூன் 2024 முதல் ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

தலா ரூ.10,000-மும், மீதமுள்ள பத்து வெற்றியாளர்களுக்கு ரூ.2,000-மும் வழங்கப்பட்டு வருகிறது.

30 நபர்கள் தலா ரூ.10000-மும், 50- நபர்கள் தலா ரூ.2000- மும் பெற்று பயனடைந்துள்ளனர்.

1). வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறை – 2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும், மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

2). சிறப்பு குலுக்கல் முறை: OTRS-இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச்சிறப்பு குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். பரிசுகள் “சிறப்பு குலுக்கல்” பொங்கல்-2025 பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வருமாறு சிறப்பு உயர் பரிசுகள் வழங்கப்படும்.

பரிசு தர வரிசை – பரிசுகள்
முதல் பரிசு – இரண்டு சக்கர வாகனம்
இரண்டாவது பரிசு – LED ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டி
மூன்றாவது பரிசு – குளிர்சாதனப் பெட்டி.

பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1). வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறை – 2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும், மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

2). சிறப்பு குலுக்கல் முறை: OTRS-இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச்சிறப்பு குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். பரிசுகள் “சிறப்பு குலுக்கல்” பொங்கல்-2025 பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வருமாறு சிறப்பு உயர் பரிசுகள் வழங்கப்படும்.

பரிசு தர வரிசை – பரிசுகள்
முதல் பரிசு – இரண்டு சக்கர வாகனம்
இரண்டாவது பரிசு – LED ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டி
மூன்றாவது பரிசு – குளிர்சாதனப் பெட்டி.

பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

Published

on

By

Mr. P. Chidambaram

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம், புகார்களைக் கையாள்வதில் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உண்மையான கடமை என்ன என்பதைப் ப. சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்கினார். தேர்தல் ஆணையம் என்பது, நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும், நீதிமன்றம் போல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிர்வாக அமைப்பாக, தேர்தல் ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அதன் பொறுப்பு.

தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, மக்களிடையே அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் என்றும் ப. சிதம்பரம் அவர்கள் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் முக்கியப் பணி. எனவே, மக்கள் அளிக்கும் புகார்களை நிராகரிப்பது அதன் கடமைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

india

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

Published

on

By

"Thiruma is my friend" Nainar Nagendran Interview!

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.

தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.

நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.

பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.

தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.

காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

india

TNPSC 2 & 2A போட்டித்தேர்வு – 645 காலி பணியிடங்கள்!

Published

on

By

TNPSC 2 & 2A Competitive Exam - 645 Vacancies!

TNPSC 2 & 2A போட்டித்தேர்வு – 645 காலி பணியிடங்கள்!

குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகளுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II (Combined Civil Services Examination-II) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பேரூராட்சி உதவி ஆணையர், சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், உள்ளிட்ட குரூப் 2 (நேர்காணல் உள்ள பதவிகள்) மற்றும் குரூப் 2A (நேர்காணல் இல்லாத பதவிகள்) சேவைகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்

645 (குரூப் 2-க்கு 50 பணியிடங்கள், குரூப் 2A-க்கு 595 பணியிடங்கள்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 13, 2025

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் இருக்க வேண்டும்.

TNPSC 2 & 2A தேர்வு கட்டணம்: ₹100

சில பிரிவினருக்கு (SC/ST, மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள்) கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

Continue Reading

Trending