Connect with us

Employment

போராட்டங்களை நடத்த போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!

Published

on

போராட்டங்களை நடத்த போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!

போராட்டங்களை நடத்த போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை,அண்ணா பல்கலை பதிவாளரை நீக்க வேண்டும் எனவும் விவாதங்கள் நடைபெற்றது.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

போராட்டம் ,ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும்.

காவல்துறையின் கட்டுப்பாடு. நேற்றுக்கூட ஆளுங்கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

ஆளுங்கட்சியாகவே இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்திய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. போராட்டங்களை நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை” என்றார்.

மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களை உள்ளடக்கி 5,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் மத்திய அரசு அமைக்கவுள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தால் அப்பகுதியில் பல்லாயிரக்கணாக்கானோர் திரண்டதால் 2000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

தென் மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

நடைபயண பேரணி மேற்கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட 5000 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3,000 ஆண்கள் மற்றும் 2,000 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Employment

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published

on

By

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நெல்லைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.3,800 கோடி முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் “வாழ்த்துகள்” என்று எழுதி கையொப்பமிட்டார்.

சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாபு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Continue Reading

Employment

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

Published

on

By

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.

பக்தர்கள் பள்ளத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.

Continue Reading

Employment

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

Published

on

By

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு போலிசார் அனுமதி அளித்துள்ளனர்.

13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை மறுநாள் பரந்தூர் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது.

தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.

நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading

Trending