Connect with us

religion

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

Published

on

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று (மே 8, 2025) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மற்றும் திக் விஜயம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக, சுவாமியும் அம்மனும் அதிகாலையில் எழுந்தருளி, நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி வந்து திருக்கல்யாண மேடையில் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் பாராயணம் செய்யப்பட்டது.

திருக்கல்யாண மேடையில் முதலில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும், பின்னர் மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் வந்த பிறகு பவளகனிவாய் பெருமாளும் எழுந்தருளினார். தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் காப்பு கட்டும் வைபவம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மணப்பட்டு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. கோயில் சார்பில் சுந்தரேஸ்வரருக்கு பட்டு பீதாம்பரமும், அம்மனுக்கு பட்டுச்சேலைகளும் அணிவிக்கப்பட்டன.

பெருமாள் மீனாட்சி அம்மனை தாரம் வார்த்துக் கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

வேத மந்திரங்கள் முழங்க,மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட காலை 8.35 மணி முதல் 8.59 மணி வரையிலான மிதுன லக்னத்தில் மீனாட்சி அம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.திருக்கல்யாணம் முடிந்தவுடன், பெண்கள் தங்களது மாங்கல்யக் கயிற்றை புதுப்பித்துக்கொண்டனர்.

திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீபாராதனைகள் காட்டப்பட்டன.

தங்கத்தால் ஆன 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தன கும்பா மற்றும் பன்னீர் தெளிப்பு கும்பா மூலம் சுவாமிக்கும் அம்மனுக்கும் பன்னீர் தெளிக்கப்பட்டது.

திருக்கல்யாண விழாவை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு பெருவிழா கோலாகலம்!

Published

on

By

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு பெருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு பெருவிழா கோலாகலம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானதும், மிகவும் பழமையானதுமான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) மிகுந்த கோலாகலத்துடனும், பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.

இந்த நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், ஆன்மீக எழுச்சியையும் ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வு, கோயிலின் கோபுரங்கள், விமானங்கள், மூலவர் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் ஆகியவற்றின் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்படும்.

யாகசாலை பூஜைகள், கலச ஸ்தாபனம், ஹோமங்கள், வேத பாராயணங்கள் எனப் பல நாட்கள் தொடர்ந்து ஆன்மீகச் சடங்குகள் நடைபெற்றன.

பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்து வசதிகள், குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம்கள் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

குடமுழுக்கைத் தொடர்ந்து, அடுத்த 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெறும்.

Continue Reading

india

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்-தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!

Published

on

By

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்-தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்-தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!

தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீக மையங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய சிகர நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, கோயில் ரத வீதிகள் தற்போது முழுவீச்சில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

கோயில் தேர்களை இழுப்பதற்காக, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் தற்போது பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேர் தங்கு தடையின்றி எளிதாகச் செல்வதற்காக, ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு, வீதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

ரத வீதிகள் முழுவதும் சுகாதாரம் பேணப்படும் வகையில் பீச்சிங் பவுடர் தூவி முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட்டு, தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர, தேரோட்டத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காகவும், முக்கியப் பிரமுகர்களுக்காகவும், தெற்கு கோபுரத்திற்கு எதிரே ஒரு பிரமாண்டமான உயர் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு, நெல்லையப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பகத் தேரோட்டத்தைக் கண்டுகளிக்கும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் என்பது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வாகும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று, தேரோட்டம் இனிதே நடைபெற பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Continue Reading

india

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 7 உள்ளூர் விடுமுறை!

Published

on

By

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூலை 7 உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 7  உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7, 2025 அன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு ஈடாக, ஜூலை 19, 2025 அன்று (மூன்றாம் சனிக்கிழமை) ஒரு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

ஜூலை 7 அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்தில் உள்ள சிறியமலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலின் (அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயில்) குடமுழுக்கு விழா ஜூலை 7, 2025 அன்று நடைபெறுகிறது.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்களை அறிவித்துள்ளது.

சோளிங்கர் ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Continue Reading

Trending