Connect with us

india

“ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்” – முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை விமர்சனம்!

Published

on

"ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்" – முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை விமர்சனம்!

“ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்” – முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை விமர்சனம்!

நீண்ட தூர ரயில் பயணங்களுக்கான டிக்கெட் கட்டணம் ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாக உயர்த்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் மக்களின் மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. ஏசி பெட்டிகள் உயர்த்த வேண்டும் என்பதற்காகச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்” என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்தப் பதிவுக்கு, பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனது பதிவில், “சென்னை, வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தி.மு.க. அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது முதல் மூலப்பொருட்கள் கிடைப்பது வரை தாமதமாகிறது. இந்நிலையில், சாலைப் பயணம் தனக்குச் சொகுசாக அமையாது என்று தெரிந்தே, தொடர்ந்து வேலூர் செல்லும்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில் கட்டண உயர்வு குறித்து நாடகமாடுகிறார்,” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், ரயில் கட்டண உயர்வு புறநகர் ரயில் டிக்கெட்டுகள், மாதாந்திர பயண அட்டை பெறுவோர், மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். தினந்தோறும் அலுவலகங்களுக்குப் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை என்றார்.

“தொலைதூர ரயில்களில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசா மற்றும் குளிர்சாதன வசதியற்ற, மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டுகளுக்கு 1 பைசா என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது,” என அண்ணாமலை தெளிவுபடுத்தினார். மேலும், 500 கிலோமீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு கிலோமீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் மட்டுமே உயர்வு இருப்பதாகவும் தெரிவித்தார்.

“ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்துத் துறைகளிலும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, 1 பைசா, 2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். “பண்டிகை நாட்களில், தனியார் பேருந்துகளில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காத முதலமைச்சர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்,” என்றும் சாடினார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Published

on

By

Prime Minister Modi's speech at the G-20 summit

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் தனது உரையில், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி அவர்கள், வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் என்ற பாகுபாடுகளைத் தாண்டி, அனைத்து மக்களையும், குறிப்பாகச் சர்வதேச தெற்குப் பகுதி (Global South) நாடுகளையும் உள்ளடக்கிய நிலையில், வளர்ச்சியில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டார்.

மாநாட்டில், பிரதமர் மோடி அவர்கள் உலகின் முன்னேற்றத்திற்காகப் பல புதிய முன்மொழிவுகளை முன்வைத்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாதச் சங்கிலித் தொடரைக் கூட்டாகத் தடுத்து நிறுத்துவது குறித்து அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உலகம் தழுவிய அளவில் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் தேவை என அவர் கோடிட்டுக் காட்டினார். இது ஒரு முக்கியமான உலகளாவிய சவாலாக உள்ளது.ஆப்பிரிக்கக் கண்டத்தின் அபாரமான ஆற்றலை உணர்த்திய பிரதமர், குறிப்பாக ஆப்பிரிக்க இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு (Skill Development) மற்றும் புதிய கல்வி வாய்ப்புகளை வழங்குவது குறித்துப் புதிய திட்டங்களை முன்மொழிந்தார். இதன் மூலம், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி அவர்கள், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்துடன் வலுவான நட்பு பாராட்டி வருகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். “இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் துணை நிற்கும்,” என்று அவர் தெளிவாகத் தெரிவித்தார்.

பிரதமரின் இந்தப் பேச்சு, சர்வதேச அளவில் இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடாக, அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் ஆதரவு அளிக்கும் நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா, உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகாணும் தளமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தேசிய மற்றும் உலகச் செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம். நன்றி!

Continue Reading

india

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

Published

on

By

Mr. P. Chidambaram

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம், புகார்களைக் கையாள்வதில் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உண்மையான கடமை என்ன என்பதைப் ப. சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்கினார். தேர்தல் ஆணையம் என்பது, நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும், நீதிமன்றம் போல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிர்வாக அமைப்பாக, தேர்தல் ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அதன் பொறுப்பு.

தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, மக்களிடையே அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் என்றும் ப. சிதம்பரம் அவர்கள் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் முக்கியப் பணி. எனவே, மக்கள் அளிக்கும் புகார்களை நிராகரிப்பது அதன் கடமைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

india

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

Published

on

By

"Thiruma is my friend" Nainar Nagendran Interview!

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.

தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.

நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.

பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.

தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.

காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending