Connect with us

world

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கு சூடு

Published

on

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கு சூடு

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், வலது காதில் ரத்தம் வந்தது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதற்கு பிரச்சாரமாக அந்நாட்டின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் என்ற இடத்தில், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் டிரம்ப்பிற்கு எதிராக ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார் அதில் அதிபர் டிரம்ப்பிற்கு காதில் காயம் ஏற்ப்பட்டது. மேலும் பொதுமக்களில் ஒருவர் துப்பாக்கிசூட்டில் உயிர் இறந்தார்.

துப்பாக்கியால் சுட்டவரையும் அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

india

14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

Published

on

By

14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.இந்த போட்டியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், ராகுல் தெவாத்தியா 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 209 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் 50 ரன்களுடனும், ஷாருக் கான் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் புகுந்தனர்.குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் 35 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 4 ரன்களில் வெளியேறினார். இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முக்கிய நாயகனாக பார்க்கப்படுபவர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தான். அவர் தனது அதிரடியான சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது. தற்போது வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.சிறு வயதிலேயே இத்தகைய பெரிய சாதனையை நிகழ்த்திய வைபவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

religion

2 லட்சம் பேர் பங்கேற்ற போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு!

Published

on

By

2 லட்சம் பேர் பங்கேற்ற போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு!

2 லட்சம் பேர் பங்கேற்ற போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

ஐந்து வார கால சிகிச்சைக்கு பிறகு மார்ச் 23ம் தேதி போப் பிரான்சிஸ் வீடு திரும்பினர்.

கடந்த ஏப்.21ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் காலமானார்.

வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

போப் ஆண்டவரின் உடலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

3 நாட்களில் சுமார் 2.5 லட்சம் பேர் போப்பின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.

நேற்று போப் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி மூடப்பட்டது.

இன்று மதியம் போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

புனித பீட்டர்ஸ் சர்ச்சில் இருந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு உலக தலைவர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Continue Reading

india

பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா கெடு!

Published

on

By

Pakistan's India is doomed!

பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா கெடு!

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த ஒரு தீவிரவாத தாக்குதலின் எதிர்வினையாக, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது.

காஷ்மீரின் அழகிய பைசரன் பகுதியில் நடந்த தாக்குதலில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டினரின் விசாக்களை உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, அவர்கள் அனைவரும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வந்த பாகிஸ்தானியர்களுக்கும் பொருந்தும்.

மத்திய அரசின் இந்த திடீர் விசா ரத்து நடவடிக்கையால், இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக தங்கள் பாகிஸ்தானுக்குத் திரும்புவதற்காக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள வாகா-அட்டாரி எல்லைக்கு படையெடுத்து வருகின்றனர்.

எல்லையில் குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

உத்தர பிரதேச மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவின் பேரில், மாநில அரசு அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

பாகிஸ்தானியர்களின் நிலை மற்றும் அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது

Continue Reading

Trending