Connect with us

india

வங்க கடலில் உருவான டானா புயல்!

Published

on

வங்க கடலில் உருவான டானா புயல்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது.

மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பது

“ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு தெற்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு- தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.24) தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். வடக்கு ஒடிஸா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக (டானா) மாறி வெள்ளிக்கிழமை (அக்.25) காலை கரையைக் கடக்கக்கூடும்”. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் கிடையாது.

india

மும்பையில் பட்டாசு வெடிக்க தடை

Published

on

மும்பையில் பட்டாசு வெடிக்க தடை

மும்பையில் பட்டாசு வெடிக்க தடை

 

மும்பை மாநகர காவல் துறை மே 11 முதல் ஜூன் 9, 2025 வரை எல்லைக்குள் பட்டாசுகள் மற்றும் ராக்கெட்டுகளை வெடிக்க தடை விதித்துள்ளது .

ஜம்மு காஷ்மீரின் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுப்பதுடன், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மும்பை காவல்துறை மே 11 முதல் ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது.இது பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்டாசுகள் போன்ற வெடிபொருட்கள் பயங்கரவாத சூழலில் பீதி அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்பதால், இது பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Continue Reading

india

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது எப்படி?

Published

on

How did the India-Pakistan war end

பாகிஸ்தான் மற்றும் இந்தியா தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலளிக்க கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மே 8 மற்றும் 9ம் தேதிக்கிடையிலான இரவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா S-400 மற்றும் ஆகாஷ் போன்ற பாதுகாப்பு முறைமைகளால் தடுப்பதில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பாகிஸ்தான் முதல்முறையாக இந்தியாவுடன் நேரடியாக பேசியது. தாக்குதல் மேலும் தீவிரமாவதற்குள், பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், உடனடி சமாதானம் ஏற்படுவதை வரவேற்பதாகவும் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார்.

பின்னர், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: “பாகிஸ்தான் இராணுவத் தலைவர், இந்தியா இராணுவத் தலைவரை இன்று மாலை 3:35 மணிக்கு அழைத்தார். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குப் பிறகு, நிலம், வானம் மற்றும் கடல் வழித் தாக்குதல்களை இருதரப்பும் நிறுத்த ஒப்புக் கொண்டன. மே 12-ம் தேதி இரு நாடுகளின் ராணுவத் தலைவர்கள் மேலும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்றார்.

Continue Reading

india

சண்டை முடிந்தாலும், சிந்து நீர் இல்லை – இந்தியா

Published

on

Even after the fight, there is no Indus water - India

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் சமீபத்தில் முடிவடைந்தது. பாகிஸ்தான், இந்தியாவின் தாக்குதலால் பின்னடைவுக்கு போய், போர் நிறுத்த கோரியது, அதை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய தீர்மானத்தில் இந்தியா எந்த மாற்றமும் செய்யவில்லை; அந்த நடவடிக்கை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் இந்தியாவின் பைசரன் பள்ளத்தாக்கில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாக கூறப்பட்டது. இதற்குப் பதிலளிக்க இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தது. 1960ல் உலக வங்கி முன்னிலையில் கையெழுத்தான சிந்து நதி ஒப்பந்தம், பாகிஸ்தானுக்குக் குடிநீர் ஆதாரமாக இருந்தது.

இதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது. இது 65 ஆண்டுகளில் முதன்முறையாக நடந்துள்ளது. இனி இந்தியா, நீர்வழிப் திட்டங்களை தானாகவே மேற்கொள்ள முடியும் எனும் நன்மை உள்ளது. இந்தியா சண்டையை மட்டும் நிறுத்த ஒப்புக் கொண்டாலும், பேச்சுவார்த்தைக்கோ பிற விசயங்களுக்கோ இன்னும் தயாராக இல்லை.

Continue Reading

Trending