Connect with us

india

நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்!

Published

on

நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்!

நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்!

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.

வரும் 20-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக விவாதம் நடத்தவும் கோரிக்கை விடுத்து மக்களவையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசில் தெரிவித்துள்ளதாவது,“நடப்பு 2024ம் ஆண்டில் இதுவரை 350 மீனவர்களும், 49 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். எனவே இரு நாட்டு மீனவர்களும் எந்த பாதிப்பும் இன்றி மீன்பிடிப்பதை உறுதி செய்யும் வகையிலும், கடல் எல்லையை தெளிவுபடுத்தும் வகையிலும் இந்தியா இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து இந்த இடர்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் மீனவர்கள் பிரச்னையை சுமூகமாக முடிக்கவும், குறிப்பாக மீனவர்களை விரைவாக விடுவிக்கவும் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்துள்ள இலங்கை அதிபரிடம், பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீனவர்கள் பிரச்னைகளை களைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீனவர் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 608 மீனவ கிராமங்களில் 11 லட்சம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிரந்தரத் தீர்வுக்கு அரசின் அவசரத் தலையீடு முக்கியமானது.
எனவே இந்த விவகாரம் தொடரபாக அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும்”

india

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Published

on

By

Prime Minister Modi's speech at the G-20 summit

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் தனது உரையில், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி அவர்கள், வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் என்ற பாகுபாடுகளைத் தாண்டி, அனைத்து மக்களையும், குறிப்பாகச் சர்வதேச தெற்குப் பகுதி (Global South) நாடுகளையும் உள்ளடக்கிய நிலையில், வளர்ச்சியில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்டார்.

மாநாட்டில், பிரதமர் மோடி அவர்கள் உலகின் முன்னேற்றத்திற்காகப் பல புதிய முன்மொழிவுகளை முன்வைத்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாதச் சங்கிலித் தொடரைக் கூட்டாகத் தடுத்து நிறுத்துவது குறித்து அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உலகம் தழுவிய அளவில் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் தேவை என அவர் கோடிட்டுக் காட்டினார். இது ஒரு முக்கியமான உலகளாவிய சவாலாக உள்ளது.ஆப்பிரிக்கக் கண்டத்தின் அபாரமான ஆற்றலை உணர்த்திய பிரதமர், குறிப்பாக ஆப்பிரிக்க இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு (Skill Development) மற்றும் புதிய கல்வி வாய்ப்புகளை வழங்குவது குறித்துப் புதிய திட்டங்களை முன்மொழிந்தார். இதன் மூலம், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி அவர்கள், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்துடன் வலுவான நட்பு பாராட்டி வருகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். “இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் துணை நிற்கும்,” என்று அவர் தெளிவாகத் தெரிவித்தார்.

பிரதமரின் இந்தப் பேச்சு, சர்வதேச அளவில் இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடாக, அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் ஆதரவு அளிக்கும் நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா, உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகாணும் தளமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தேசிய மற்றும் உலகச் செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம். நன்றி!

Continue Reading

india

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

Published

on

By

Mr. P. Chidambaram

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம், புகார்களைக் கையாள்வதில் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உண்மையான கடமை என்ன என்பதைப் ப. சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்கினார். தேர்தல் ஆணையம் என்பது, நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும், நீதிமன்றம் போல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிர்வாக அமைப்பாக, தேர்தல் ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அதன் பொறுப்பு.

தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, மக்களிடையே அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் என்றும் ப. சிதம்பரம் அவர்கள் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் முக்கியப் பணி. எனவே, மக்கள் அளிக்கும் புகார்களை நிராகரிப்பது அதன் கடமைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

india

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

Published

on

By

"Thiruma is my friend" Nainar Nagendran Interview!

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.

தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.

நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.

பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.

தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.

காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending