Connect with us

religion

தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை

Published

on

தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை!

தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை

அருள்மிகு காசி விசுவநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நம்பிராஜன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

கோயில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது கோயிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது.

கோயிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023ஆம் ஆண்டு கூட்டம் போடப்பட்டு அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.

அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.

தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிசேகம் நடத்த இடைக்கால தடை விதித்தது.

அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

india

டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்!

Published

on

By

டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்!

டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்!

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆபத்தான நிலையில் போராடி வந்த அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதி சடங்கள் குறித்த கேள்விகள் வாடிகனில் எழுந்ததது.

கடந்த மார்ச் முதல் வாரத்தில் அவர் அபாய நிலைய தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.

இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்” என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் கூடியிருந்து நூற்றுக்கணக்கான மக்களுக்கு கை அசைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.

சிகிச்சைக்கு பிறகு போப் பிரான்சிஸ் வீடு திரும்ப உள்ளார்.

Continue Reading

Employment

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

Published

on

By

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.

பக்தர்கள் பள்ளத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.

Continue Reading

Employment

முருகனுக்கே ஐபோன் சொந்தம்…உண்டியலில் போட்டதால் ஐபோன் முருகனுக்கே சொந்தம்!

Published

on

By

முருகனுக்கே ஐபோன் சொந்தம்...உண்டியலில் போட்டதால் ஐபோன் முருகனுக்கே சொந்தம்!

முருகனுக்கே ஐபோன் சொந்தம்…உண்டியலில் போட்டதால் ஐபோன் முருகனுக்கே சொந்தம்!

உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் கடவுளுக்கே சொந்தம் ஐபோனை இழந்த பக்தர் சோகத்துடன் வீடு திரும்பினார்.

திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் ஆறு மாதங்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.

காணிக்கையிட்டிருந்த தாலி, கண்மலர், வேல், பண முடிப்பு, சில்லறை நாணயங்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

52 லட்ச ரூபாயும், 289 கிராம் தங்கமும், 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

கோயில் நிர்வாகத்தினர், உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. செல்போன் கொடுக்க முடியாது.

செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என வந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு அளித்துள்ளார்.

செல்போனை மீட்டுக் கொடுக்கும்படி அந்த மனுவில் கேட்டுள்ளார்.

நிர்வாக ரீதியான முறைப்படி நீங்கள் அங்கு மனு அளித்து மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Continue Reading

Trending