Connect with us

india

கலைஞர் மகன் மு.க.முத்து மறைவு!

Published

on

கலைஞர் மகன் மு.க.முத்து மறைவு!

கலைஞர் மகன் மு.க.முத்து மறைவு!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 19, 2025) உயிரிழந்தார். அவரது மறைவு, திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் மு.க.முத்து. 1970களில் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான இவர், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனது தனித்துவமான நடிப்பால் அறியப்பட்டார். அவர் நடித்த படங்களில் “அணையா விளக்கு”, “பூக்காரி”, “பிள்ளையோ பிள்ளை” மற்றும் “சமையல்காரன்” போன்றவை குறிப்பிடத்தக்கவை. நடிப்பு மட்டுமின்றி, சில திரைப்படங்களில் தனது சொந்தக் குரலில் பாடல்களையும் பாடி, பன்முகத் திறமையாளராக விளங்கினார்.

மு.க.முத்து ஆரம்பத்தில் திரையுலகில் தீவிரமாக இயங்கினார். இருப்பினும், ஒரு சில படங்களுக்குப் பிறகு, அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. அரசியல் ரீதியாகவும், ஆரம்பத்தில் சில செயல்பாடுகளில் ஈடுபட்டாலும், பின்னர் அரசியல் பணிகளில் பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். தனது தந்தையின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்டாலும், மு.க.முத்து அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்படவில்லை. தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நிதானமாகவும், பொது வாழ்க்கையிலிருந்து விலகியும் வாழ்ந்தார்.

கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவரது வயது 77.

மு.க.முத்துவின் மறைவுச் செய்தி அறிந்ததும், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு, கலைஞர் குடும்பத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

india

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

Published

on

By

Mr. P. Chidambaram

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம், புகார்களைக் கையாள்வதில் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உண்மையான கடமை என்ன என்பதைப் ப. சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்கினார். தேர்தல் ஆணையம் என்பது, நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும், நீதிமன்றம் போல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிர்வாக அமைப்பாக, தேர்தல் ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அதன் பொறுப்பு.

தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, மக்களிடையே அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் என்றும் ப. சிதம்பரம் அவர்கள் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் முக்கியப் பணி. எனவே, மக்கள் அளிக்கும் புகார்களை நிராகரிப்பது அதன் கடமைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

india

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

Published

on

By

"Thiruma is my friend" Nainar Nagendran Interview!

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.

தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.

நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.

பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.

தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.

காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

india

TNPSC 2 & 2A போட்டித்தேர்வு – 645 காலி பணியிடங்கள்!

Published

on

By

TNPSC 2 & 2A Competitive Exam - 645 Vacancies!

TNPSC 2 & 2A போட்டித்தேர்வு – 645 காலி பணியிடங்கள்!

குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகளுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II (Combined Civil Services Examination-II) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பேரூராட்சி உதவி ஆணையர், சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், உள்ளிட்ட குரூப் 2 (நேர்காணல் உள்ள பதவிகள்) மற்றும் குரூப் 2A (நேர்காணல் இல்லாத பதவிகள்) சேவைகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்

645 (குரூப் 2-க்கு 50 பணியிடங்கள், குரூப் 2A-க்கு 595 பணியிடங்கள்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 13, 2025

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் இருக்க வேண்டும்.

TNPSC 2 & 2A தேர்வு கட்டணம்: ₹100

சில பிரிவினருக்கு (SC/ST, மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள்) கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

Continue Reading

Trending