Connect with us

india

இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் ஆய்வு மையம்: தமிழ்நாட்டிற்கு புதிய வாய்ப்புகள்!

Published

on

Project Samudrayaan 2024 India to launch first marine submersible ‘Matsya 6000’ in Bay of Bengal

தென்னிந்தியாவின் கடல்சார் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ஒரு முக்கிய திட்டம்:

  • இந்திய அரசு, தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நவீன ஆழ்கடல் ஆய்வு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
  • இது கடல்வாழ் உயிரினங்களை ஆராய்வதில் முன்னணியில் இருக்கும், இது புதிய உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் மருத்துவம், உணவு மற்றும் பிற துறைகளில் புதுமையை ஊக்குவிக்கும்.

தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள்:

  • இந்த திட்டம் தமிழ்நாட்டை கடல்சார் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் மையமாக மாற்றும்.
  • இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
  • இளைஞர்களை கடல்சார் அறிவியலில் ஆர்வம் கொள்ள ஊக்குவிக்கும் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் திறமைகளை வளர்க்க உதவும்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிப்பு:

  • இந்த ஆழ்கடல் ஆய்வு மையம் 2047ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நீண்டகால இலக்குகளில் ஒன்றாகும்.
  • இது கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னணியை வலுப்படுத்தும் மற்றும் நீல பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

திட்டத்தின் தற்போதைய நிலை:

  • திட்டம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
  • அரசாங்கு முதலீட்டாளர்களை தேடி வருகிறது.
  • திட்டத்திற்கு நிதி கிடைத்ததும், வேலைகள் முழு வீச்சில் தொடங்கும்.

இந்தியாவின் எதிர்காலம்:

  • இந்த ஆழ்கடல் ஆய்வு மையம் இந்தியாவை ஆழ்கடல் ஆய்வில் ஒரு முன்னணி நாடாக உருவாக்கும்.
  • கடல்வளங்களைப் பாதுகாக்க மற்றும் நீடித்த எதிர்காலத்திற்கு இது வழிவகுக்கும்.

Employment

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

Published

on

By

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.

பக்தர்கள் பள்ளத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.

Continue Reading

Employment

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

Published

on

By

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு போலிசார் அனுமதி அளித்துள்ளனர்.

13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை மறுநாள் பரந்தூர் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது.

தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.

நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading

india

நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!

Published

on

By

நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!

நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது.

தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.

வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி விவசாயிகள் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் திமுக ஆட்சி தான்.

ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லை, நடைபாதைகள் இல்லை, மின் கட்டணம் போன்ற பிரச்னைகள் ஏராளமாக உள்ளது.

சொல்லாததை சீமான் எதுவும் சொல்லவில்லை, இந்த மண்ணுக்கு தேவையான விஷயங்களை தான் சீமான் பேசி வருகிறார். எனவே சீமான் பேசியது சரி தான்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending