Connect with us

religion

ஆடி வரும் கள்ளழகர் : ஆடி தேரோட்டம்

Published

on

ஆடி வரும் கள்ளழகர் ஆடி தேரோட்டம்

  • மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று புகழப்படும் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது.
  • 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமியும் அம்பாளும் வீதி உலா வந்தனர்.
  • விழாவின் இறுதி நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
  • காலை 7 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
  • இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
  • இதனால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
  • 18-ம்படி கருப்பணசாமி சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பவுர்ணமியன்று மாலையில் கதவுகள் திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் படி பூஜை செய்வது வழக்கம் இந்நிகழ்வும் இன்று நடைபெறுவது தனி சிறப்பு.

Employment

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

Published

on

By

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.

பக்தர்கள் பள்ளத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.

Continue Reading

Employment

முருகனுக்கே ஐபோன் சொந்தம்…உண்டியலில் போட்டதால் ஐபோன் முருகனுக்கே சொந்தம்!

Published

on

By

முருகனுக்கே ஐபோன் சொந்தம்...உண்டியலில் போட்டதால் ஐபோன் முருகனுக்கே சொந்தம்!

முருகனுக்கே ஐபோன் சொந்தம்…உண்டியலில் போட்டதால் ஐபோன் முருகனுக்கே சொந்தம்!

உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் கடவுளுக்கே சொந்தம் ஐபோனை இழந்த பக்தர் சோகத்துடன் வீடு திரும்பினார்.

திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் ஆறு மாதங்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.

காணிக்கையிட்டிருந்த தாலி, கண்மலர், வேல், பண முடிப்பு, சில்லறை நாணயங்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

52 லட்ச ரூபாயும், 289 கிராம் தங்கமும், 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

கோயில் நிர்வாகத்தினர், உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. செல்போன் கொடுக்க முடியாது.

செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என வந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு அளித்துள்ளார்.

செல்போனை மீட்டுக் கொடுக்கும்படி அந்த மனுவில் கேட்டுள்ளார்.

நிர்வாக ரீதியான முறைப்படி நீங்கள் அங்கு மனு அளித்து மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Continue Reading

india

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றம்!

Published

on

By

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  புகழ்பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயில் அமைந்துள்ளது.
ஆடி பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இளையராஜாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
ஜீயர்கள் கோயில் கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்திற்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார்.
கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர்.
பிறகு மண்டபத்திற்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார்.
ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்திற்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Continue Reading

Trending