tamilnadu
மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள்

மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள்
- அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரையில் கேஸ் பேருந்து இயக்கம் மதுரையில் அரசு போக்குவரத்துக் கழகம் நேற்று கேஸ் மூலம் இயங்கும் பேருந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் தமிழ்நாடு அரசு போக்கும் வரத்துகழகம் இணைத்து சிஎன்ஜி கேஸ் மூலம் இயக்கப்படும் பேருத்தின் இயக்கம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கியது
- காற்று மாசுபாடு,எரிபொருள் செலவு குறையும் என்ற பல காரணக்களுக்காக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
- இவ்வகை பேரூந்துகளில் இயற்கை எரிவாயு பஸ்கள், CNG (Compressed Natural Gas) பயன்படுத்துகின்றன.
- மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன இவ்வகை பேருந்துகள்.
india
14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.இந்த போட்டியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும், ராகுல் தெவாத்தியா 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 209 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் 50 ரன்களுடனும், ஷாருக் கான் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் புகுந்தனர்.குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் 35 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 4 ரன்களில் வெளியேறினார். இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முக்கிய நாயகனாக பார்க்கப்படுபவர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தான். அவர் தனது அதிரடியான சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது. தற்போது வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.சிறு வயதிலேயே இத்தகைய பெரிய சாதனையை நிகழ்த்திய வைபவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
india
தேமுதிக கட்சியில் விஜயகாந்த் மகனுக்கு முக்கிய பொறுப்பு

தேமுதிக கட்சியில் விஜயகாந்த் மகனுக்கு முக்கிய பொறுப்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்தனர்
விஜயகாந்தின் மூத்த மகனான விஜயபிரபாகரன், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், கட்சியின் இளைஞர் அணியை வலுப்படுத்தவும், இளைஞர்களின் ஆதரவை திரட்டவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் இளைஞர் அணி செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ், கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயபிரபாகரனுக்கு முழு ஒத்துழைப்பு தந்து தேமுதிகவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார்
cinema
தளபதி விஜயின் ஜனநாயகன்

தளபதி விஜயின் ஜனநாயகன்
விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்போடு “ஜனநாயகன்”.
தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஜனநாயகன்”.
இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.இப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார்
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது
இந்த படத்தின் ப்ரோமோ டீசர் அல்லது மோஷன் போஸ்டர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் இந்த அப்டேட்க்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
-
Employment10 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
cinema10 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
Uncategorized10 months ago
Hello world!
-
cinema10 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
tamilnadu10 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
india6 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india10 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
india10 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்