Connect with us

india

குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் இந்தியாவில்

Published

on

Apple Watch for kids

ஆப்பிள் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான வாட்ச் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Apple Watch SE, Apple Watch 4 மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் இந்த சேவை செயல்படும். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க முடியும், அவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம், மற்றும் அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தரவுகளை கண்காணிக்க முடியும்.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் குழந்தைகளுக்கான வாட்ச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எளிதான அழைப்பு, செய்தி அனுப்புதல் மற்றும் செயல்பாடு கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. குழந்தைகளுக்கு தனித்தனியாக ஐபோன் இல்லாமலும் இந்த வாட்ச் செயல்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்க விரும்பாத பெற்றோருக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம், “Apple Watch For Your Kids இந்தியாவில் கிடைக்கிறது. இது Apple Watch Series 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாடல்கள் அல்லது Apple Watch SE இன் செல்லுலார் மாடல்களில் செயல்படும். இதற்கு iPhone 8 அல்லது அதற்கு மேற்பட்ட மாடல்களில் சமீபத்திய watchOS மற்றும் iOS இயங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

சல்மான்கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு https://tnnews24.com/2024/07/25/salman-khan-firing-case-shooters-told-to-scare-bhai-smoke-to-appear-fearless-on-cctv/

“இது குழந்தைகள் மற்றும் ஐபோன் இல்லாத மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஆப்பிள் வாட்சின் தொடர்பு, உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது” என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

இந்த புதிய அம்சத்துடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும், அதே நேரத்தில் அனைத்து தனிப்பட்ட தரவுகளும் பாதுகாப்படும். பெற்றோர்கள் மேலும் அனைத்து தொடர்புகளையும் அங்கீகரிக்க முடியும், இதனால் குழந்தைகள் ஆப்பிள் வாட்சின் தொடர்பு அம்சங்களை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

“Apple Watch For Your Kids ஐ பயன்படுத்தும் குழந்தைகளுக்கு தனித்தனியாக செல்லுலார் திட்டத்தின் மூலம் தனித்தனியாக போன் எண் இருக்கும், மேலும் அவர்களுடைய சொந்த ஆப்பிள் ID ஐப் பயன்படுத்தலாம்” என்று ஆப்பிள் கூறியது. செல்லுலார் சேவைக்கு ஆப்பிள் வாட்சிற்கான வயர்லெஸ் சேவை திட்டம் தேவைப்படும் என்றும், தற்போது இந்தியாவில் ஜியோ மூலம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குழந்தைகள் காலண்டர் அம்சத்தைப் பயன்படுத்தி அட்டவணைகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளைப் பின்பற்றலாம், நினைவூட்டல்களுடன் பணிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ளலாம் மற்றும் பெற்றோர்கள் ஐபோனிலிருந்து புகைப்படங்களைப் பார்க்கலாம்.

india

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

Published

on

By

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!
கொல்கத்தா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று கோலகலமாக தொடங்குகிறது.

தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன.

கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

தொடக்க நிகழ்ச்சியில் பாடகா்கள் ஷ்ரேயா கோஷல், கரண் அஜ்லா, பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சிகள் மாலை 6 மணியளவில் தொடங்கி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.

மொத்தம் 70 போட்டிகளை கொண்ட லீக் சுற்று, மே 18ம் தேதி முடிகிறது.

இன்றைய ஆட்டத்திற்காக கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

Continue Reading

india

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

Published

on

By

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

ரமலான் நோன்பினை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.

வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கொண்டாடப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இஸ்லாமிய பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக வருகை தந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

india

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

Published

on

By

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாளை மார்ச் 18 பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இணைந்து ராக்கெட் ஒன்றை விண்ணிற்கு கடந்த மார்.14ஆம் தேதி அனுப்பியது.

ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் நாசா விண்வெளி வீரர்கள், சக அமெரிக்கரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு) புளோரிடா கடற்கரையில் பாதுகாப்பாக தரையிரங்கியது.

மெக்சிகோ வளைகுடாவில் பாராசூட் உதவியுடன் தரையிரங்கியது.

ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு சென்றனர்.

வீரர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Continue Reading

Trending