religion
ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் அலைமோதும் கூட்டம்

ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் அலைமோதும் கூட்டம்
கார்த்திகை நட்சத்திரம் தமிழ் மாதமான ஆடியில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் முருகனுக்கு வெகு விசேசமான நாளாககும்.
சமஸ்கிருதத்தில் கிருத்திகை எனவும் தமிழில் கார்த்திகை நட்சத்திரம் எனவும் கருதுவர்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் முருகன் என கருதுவதால்
கார்த்திகை நட்சத்திரம் தை மாதம் மற்றும் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு சிறப்பு வாய்தந்ததாக கருதப்படுகிறது.
இன்றைய தினம் அருகில் உள்ள முருகன் வழிபாட்டு தலங்களுக்கு சென்று முருகனை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இன்று காலை முதல் முருகனின் அறுபடை வீடுகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக திருச்செந்தூரில் காலை சிறப்பு தரிசனம் முதல் மக்கள் பலர் விரதம் இருந்து வழிபட கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
religion
தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை

தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை
அருள்மிகு காசி விசுவநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
நம்பிராஜன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
கோயில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது கோயிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது.
கோயிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023ஆம் ஆண்டு கூட்டம் போடப்பட்டு அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.
தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிசேகம் நடத்த இடைக்கால தடை விதித்தது.
அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
india
டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்!

டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்!
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
ஆபத்தான நிலையில் போராடி வந்த அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதி சடங்கள் குறித்த கேள்விகள் வாடிகனில் எழுந்ததது.
கடந்த மார்ச் முதல் வாரத்தில் அவர் அபாய நிலைய தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.
இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்” என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் கூடியிருந்து நூற்றுக்கணக்கான மக்களுக்கு கை அசைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.
சிகிச்சைக்கு பிறகு போப் பிரான்சிஸ் வீடு திரும்ப உள்ளார்.
Employment
திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!

திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.
பக்தர்கள் பள்ளத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.
-
Employment10 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized10 months ago
Hello world!
-
cinema9 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu9 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema9 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india5 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india10 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india9 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்