Connect with us

tamilnadu

உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

Published

on

உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை தாவரவியல் பூங்காவின் 127-வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார்.

கோடை விடுமுறையைக் கொண்டாட ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடை விழாவின் முக்கிய அங்கமாக இந்த மலர் கண்காட்சி திகழ்கிறது.

மலர் கண்காட்சி இன்று முதல் (மே 15- 25ம்) தேதி வரை, மொத்தம் 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

மலர் கண்காட்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட 275 வகையான விதைகள் மற்றும் நாற்றுகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற பல புதிய ரகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளனர்.

பூங்காவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7½ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

45 ஆயிரம் மலர் தொட்டிகளில் விதவிதமான மலர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாக, சோழர்களின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் பிரம்மாண்டமான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு ராஜராஜ சோழனின் அரண்மனை போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சோழ அரசின் பெருமையை பறைசாற்றும் விதமாக, கரிகாலன் கட்டிய கல்லணையின் வடிவம் 65 ஆயிரம் பூக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 லட்சம் மலர்களைப் பயன்படுத்தி செஸ் போர்டு, யானை போன்ற கவர்ச்சியான அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.

தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை மற்றும் கள்ளிச்செடி மாளிகை ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த புதுப்பிக்கப்பட்ட பகுதிகளில் அரிய வகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரியத்தை மலர்களின் மூலம் அழகாக வடிவமைத்து மக்கள் மத்தியில் உணர்வூட்டும் இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் பெருமையை உலகுக்கு காட்டும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

india

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

Published

on

By

Mr. P. Chidambaram

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம், புகார்களைக் கையாள்வதில் நீதிமன்றம் போலச் செயல்பட முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உண்மையான கடமை என்ன என்பதைப் ப. சிதம்பரம் அவர்கள் தெளிவாக விளக்கினார். தேர்தல் ஆணையம் என்பது, நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும், நீதிமன்றம் போல வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிர்வாக அமைப்பாக, தேர்தல் ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அதன் பொறுப்பு.

தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடு, மக்களிடையே அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும் என்றும் ப. சிதம்பரம் அவர்கள் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே அதன் முக்கியப் பணி. எனவே, மக்கள் அளிக்கும் புகார்களை நிராகரிப்பது அதன் கடமைக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Continue Reading

tamilnadu

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

Published

on

By

Gold Rate Today

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ₹560 குறைந்து, ₹75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹70 குறைந்து, ₹9,375-க்கு விற்கப்படுகிறது. இது கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க சரிவாகும். உலகப் பொருளாதார நிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் கொள்கைகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹127-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது.

இந்த விலை நிலவரம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு நிச்சயம் உதவும். விலை நிலவரம் மேலும் ஏறுமா அல்லது இறங்குமா என்பதைப் பொறுத்து, பொதுமக்கள் தங்கள் முடிவுகளை எடுக்கலாம்.

Continue Reading

india

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

Published

on

By

"Thiruma is my friend" Nainar Nagendran Interview!

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது.

தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர்.

நட்பு என்பது வேறு, அரசியல் களம் வேறு.

பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார்.

தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.

காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending